search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் குற்றங்கள்"

    • நடத்தைகளில் பல வகை உள்ளன.
    • பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பெண்ணை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன் காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது... இதுபோன்ற செயலினால் பெண்ணுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை `ஸ்டாக்கிங்' என்கிறார்கள். இம்மாதிரியான நடத்தைகளில் பல வகை உள்ளன. பெண்களால் நிராகரிக்கப்பட்டதால், அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு செய்வதும் உண்டு. அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம்.

    இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார். தனக்குக் கிடைக்காத ஒரு பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று பொறுமுகிறார். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

    இன்னொருபுறம், பெண்களை பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். பெண்ணின் உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. கோரிக்கை மறுக்கப்படும்போது, அந்த பெண் மீது வன்செயல்களை செய்ய நினைக்கிறார்கள்.

    பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாகவோ அல்லது வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாகவோ அணுகுவதும் தவறு.

    மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது? என்று இனம் காண்பது இதில் மிக அவசியம். பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்ந்த உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோரும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேச தயக்கம் காட்டுகிறார்கள். இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாத ஒன்றாகிறது.

    • தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
    • பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் தடுப்பதற்கான சிறப்புத் திட்டங்களை வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
    • வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

    • காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.
    • வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழப்புணர்வு தொட க்கவிழா நிகழ்ச்சி நடைபெ ற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசிய தாவது:-

    பெண் குழந்தைகளை கண் இமைபோல் பாதுகாக்க இமைகள் எனும் மகத்தான திட்டம் தொடங்கப்ப ட்டுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலா 50 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்ட காவல் அலுவலக த்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் பயன்ப டுத்தும் ஆயுதங்கள் மற்றும் கோப்புகள் காவல்துறை இயங்கும் விதம் குறித்து அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவ ரிடமும் பெண் காவல்துறை யினர் நட்பாக பழகி அவர்களுக்கு பொதுவெ ளியிலோ அல்லது பள்ளி களிலோ ஏதேனும் பாலியல் தொந்தரவு உள்ளதா என்று அறிந்து கொள்ள அறிவுறு த்தபட்டுள்ளது. ஏதேனும் பிரச்சனைகள் அவர்களுக்கு இருந்தால் அதை பெண் காவல்துறையினர் அறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்க ளிடையே காவல்துறையினர் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காவல்துறை என்றும் கண் இமைபோல் காக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். காவல்துறையினரிடம் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, அதைச் சார்ந்த சட்டங்கள் பற்றியும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை முடித்து 60 நாட்களுக்குள் இறுதியறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதுடன் குற்றம் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளுவது குறித்தும் ஆலோ சனை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் மற்றும் அனைத்து உட்கோ ட்ட துணை போலீஸ் சூப்பிர ண்டு அனைத்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×